அக்கினியினால் தூண்டப்படுதல்
சோர்வுற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள், காலை உணவிற்காக ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது, பணியாளர் இவர்கள் செய்திகளில் தோன்றினவர் என்று அடையாளம் கண்டு, அவர்கள் ஒரு கிடங்கின் தீயை எதிர்த்துப் ஒரு இரவு முழுவதும் போராடினார்கள் என்பதை உணர்ந்தார். தனது பாராட்டுக்களைக் காட்ட , அவர் அவர்களின் ரசீதில் ஒரு குறிப்பை எழுதினார், “உங்கள் காலை உணவு இன்று என்னிடம் உள்ளது. நன்றி . . . மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவும், எல்லோரும் விட்டு ஓடும் இடங்களுக்கு ஓடியதற்காகவும் . . . . நெருப்பால் தூண்டப்பட்டு, தைரியத்தால் இயக்கப்பட்டீர்கள், நீங்கள் எவ்வளவு சிறந்த ஒரு உதாரணம்."
பழைய ஏற்பாட்டில், மூன்று இளைஞர்களின் செயல்களில் தைரியத்தின் ஒரு உதாரணத்தைக் காண்கிறோம்: சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ (தானியேல் 3). பாபிலோனிய ராஜாவின் சிலையை வணங்குவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, இந்த இளைஞர்கள் தைரியமாக அதை மறுத்ததன் மூலம் தேவன் மீதுள்ள அன்பைக் வெளிப்படுத்தினர். அவர்களின் தண்டனை அக்கினிச்சூளைக்குள் வீசப்பட வேண்டும் என்பதே. ஆனாலும் அந்த இளைஞர்கள் பின்வாங்கவில்லை: “நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை,…பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை. (வச. 17-18).
தேவன் அவர்களை மீட்டார், அவர்களுடன் நெருப்பிலேயும் கூட உலாவினார் (வச. 25-27). இன்று நம்முடைய தீக்கனையான சோதனைகளிலும், தொல்லைகளிலும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்ற உறுதி நமக்கும் இருக்கிறது. அவரால் முடியும்.